சிங்கப்பூருக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கையர் ஒருவர் தொழிலதிபராக மாறியுள்ளார்.
36 வயதான நிலுசிக்கா விஜேவர்தன என்ற இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் வியப்பூட்டும் நபராக மாறியுள்ளார்.
சிங்கப்பூருக்கு 15 வருடங்களுக்கு முன்னர் பணிப்பெண்ணாக சென்ற நிலுசிக்கா, தீவிர முயற்சியின் காரணமாக இன்று தொழிலதிபராக மாறியுள்ளார்.
இலங்கையில் தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைகளை கொள்வனவு செய்து அவற்றை பெட்டிகளில் அடைத்து சர்வதேச ரீதியில் 500 நுகர்வோர்களுக்கு விற்பனை செய்தே இச்த சாதனையயை எட்டியுள்ளார்.
நிலுசிக்கா, இளம் வயதிலேயே தனது பெற்றோர்களை இழந்த நிலையில் உறவினர்களுடனேயே வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பணம் சம்பாதிக்குமாறு உறவினர்கள் வற்புறுத்தலுக்கு அமைய குறித்த பெண் பணிப்பெண்ணாக சிங்கப்பூர் சென்றுள்ளார்.
குறித்த பெண், வெளிநாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்வோருக்கு ஆலோசனை வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
பணத்தை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது போன்ற விடயங்களை அவர் தெளிவுபடுத்தி வருகிறார்.
மேலும்,அங்கு சம்பாதித்த பணத்தை வைத்துக் கொண்டு குறித்த பெண் பல கற்கை நெறிகளை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் குறித்த பெண் வசிக்கும் பகுதிகளில் உள்ள சிறுவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் கல்வி தேவையான அனைத்து உதவிகளையும் குறித்த பெண் மேற்கொண்டு வருகின்றார்.
அத்துடன் அவர் அண்மையில் சிறந்த ஆலோசனை வழங்கும் பேச்சாளர் பட்டியலில் இணைந்துள்ளார்.