பாரிய விபத்து : 12 பேர் பலி, 45 க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம்!!

368


ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பொது மக்கள் கிறிஸ்துமஸ் அங்காடி ஒன்றில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வேகமாக வந்த லொறி ஒன்று மோதியதால் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பாரிய விபத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 45 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.