வவுனியா பொலிஸ் பிரிவில் மது போதையில் வாகனம் செலுத்திய 83 சாரதிகள் கைது!!

269


வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மது போதையில் வாகனம் செலுத்திய கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது 83 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாவக்கச்சேரி பகுதியில் நேற்று முந்தினம் இடம்பெற்ற வாகன விபத்தையடுத்து பொலிஸார் நேற்று இந்த விசேட சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.

நேற்று முன்தினமிரவு 7 மணிக்கு ஆரம்பமான இந்த சுற்றிவளைப்பு இரவு 10 மணிவரை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது மதுபேபாதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் கண்டறியப்பட்டனர். இதன் போது 83 சாரதிகள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.