வவுனியா தபாலத்தில் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!!

593


நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தவகையில் நேற்று (19.12.2016) இரவு தொடக்கம் அமுலாகும் வகையில் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற்று வருகின்றது. வவுனியா மத்திய தபாலகத்திலும் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதியோர் கொடுப்பனவுகளை பெறுவதற்கு முதியோர்கள் பலர் பல சிரமத்திற்கு மத்தியில் அஞ்சல் அலுவலகத்தினை நாடியபோதும் இப் பணிபுறக்கணிப்பு காரணமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நான்கு கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றுவருவதாக ஒன்றியத்தின் இணைப்பாளர் கே. என். சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.