வவுனியாவில் வெடிபொருட்களுடன் மூவர் பொலிசாரால் கைது!!

243

 
வவுனியாவில் நேற்று(19.12.2016) இரவு ஏ9 வீதியில் வெடிபொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று முறிப்பு பகுதியிலே இச் சம்பவம்இ டம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..

வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக வவுனியா போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் போது மதவாச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த முச்சக்கர வண்டியை மறித்து சோதனை செய்த போது குறித்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

பொலிசாரால் ஜெக்னேற்றர் – 199, ஜெக்னேற்றர் தொப்பி – 200, 10 மீற்றர் நீளமான வயர் றோல் – 5 மற்றும் பயணப்பை – 02 என்பன கைப்பற்றப்பட்டதுடன் முச்சக்கர வண்டியும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.