வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயம்!!

740

வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (19.12.2016) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா மாகாறம்பைக்குளத்தில் நேற்று இரவு 9 மணியளவில் இரு அயலர்களுக்கிடையே வாக்குவாதம் இடம்பெற்று இவ் வாக்குவாதம் மோதலாக மாறி வாள் வெட்டுச்சம்பவத்துடன் முடிவடைந்துள்ளது.

இவ் வாள்வெட்டுச் சம்பவம் காரணமாக 21 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.