வவுனியாவில் பார ஊர்தி மின்கம்பத்துடன் மோதி விபத்து : சாரதி படுகாயம்!!

320

 
வவுனியாவில் பார ஊர்தி ஒன்று கனகராயன்குளம் ஏ9 வீதியில் இன்று(20.12.2016) அதிகாலை மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற பார ஊர்தியானது வீதியை விட்டு விலகி உயர் அழுத்த மின் விநியோக கம்பம் ஒன்றுடன் மோதியது.

இதனால் மின்கம்பம் முற்றாக முறிந்து வீழ்ந்துள்ளது. மின் கம்பம் முறிந்து விழுந்தமையால் அப்பகுதியில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது. விபத்து காரணமாக பார ஊர்தியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.