வவுனியா வேப்பங்குளம் அன்பகத்திற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் அன்பளிப்பு!!

340

 
வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்றயதினம் (19.12.2016) சுவிஸ் வாழ் உறவுகளான தீபன் சுகந்தினி தம்பதிகளின் புதல்வி செல்வி .ஆர்.றஸ்மியா அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வழங்கப்பட்டது.

இன் நிகழ்வுகள் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது, நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமாகிய க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக வவுனியா வாடி வீட்டின் இயக்குனரும், இந்து அன்பகத்தின் ஆயுள் கால உறுப்பினருமான மா.கதிர்காமராஜா, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகரான முத்தையா கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களினை இந்து அன்பக இயக்குனர் கு.ஜெயராணி (சாமி அம்மா) அவர்களின் முன்னிலையில் வழங்கினார்கள்.

இன் நிகழ்வுகளில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் த.நிகேதன், உபதலைவர் பி.கெர்சோன், அமைப்பாளர் வ.பிரதீபன், கலாசார பிரிவின் ஒழுங்கமைப்பாளர் தே.பிரகாஸ்கர், உறுப்பினர் த.ரவி ஆகியோருடன் இன் நிகழ்வில் அன்பத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களுடன், ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.