வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மகரஜோதி பெருவிழா!!

1692

 
வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ அரிஹர சுதன் ஐயன் ஐயப்ப சுவாமியின் மகரஜோதி மண்டல விரத சக்தி பூஜை பெருவிழா கடந்த திங்கட்கிழமை (19.12.2016) காலை இந்து அன்பக இயக்குனர் கு.ஜெயராணி (சாமி அம்மா) தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

சபரிமலை செல்லவுள்ள சுவாமிகளுக்கு மாலை அணிவித்து இப் பூஜை சிறப்பாக இடம்பெற்றது.

இன் நிகழ்வில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வருகைதந்த சுவாமிகள் கெளரவிக்கப்பட்டதுடன், அலங்கார தீபாராதனை, ஆனந்தமிகு ஐயப்பனின் பஜனைகள், பதினெட்டாம் படிப்பூஜை, மகா தீபாராதனை, பாத தரிசனம், சக்தி பூஜை(அன்னதானம்) என்பன சிறப்பாக இடம்பெற்றன.