வவுனியாவில் சர்வதேச கற்கைமொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கிறிஸ்மஸ் நிகழ்வும்!!

250

 
வவுனியாவில் இயங்கிவரும் யூரோப்பியன் லங்வேஜ் தனியார் சர்வதேச கற்கைமொழி பயிற்சி நிலையத்தின் மூன்றாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்வும் நேற்று (20.12.2016) காலை 10 மணியளவில் இறம்பைக்குளம் விருந்தினர் விடுதியில் நிர்வாக இயக்குநர் கே.வின்சட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அந்நிறுவனத்தில் சர்வதேச மொழியினை பயின்ற 28 மாணவர்களுகளுக்கு சர்வதேச தரச் சான்றிழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஓய்வு நிலை அதிபர் திருமதி.ஜி.நடராசா, போதகர் ஜெயசீரன், போதகர். றோலனஸ், போதகர், சரத்குமார் மற்றும் நிறுவனத்தின் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

சர்வதேச மொழியினை பயின்ற மாணவர்களின் அனுபவப்பகிர்வுகள், மாணவர்களின் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.