வவுனியாவில் சேதமாக்கப்பட்ட யோசப்வாஸ் திருச்சொரூபம் மீண்டும் அதே இடத்தில்!!

230

 
வவுனியா இறம்பைக்குளம் புனித யோசப்வாஸ் வீதியில் அமைக்கப்பட்டிருந்த புனித யோசப்வாஸ் திருச் சொரூபம் கடந்த 10.12.2016 அன்று நள்ளிரவில் விஷமிகளால் தாக்கி சேதப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ் அடிகளால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது.

தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.12.2016) காலை திருப்பலியின் பின்னர் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட புனித யோசப்வாஸ் திருச்சொரூபம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் அந்தோனியார் சிலை உடைப்பு : அதிர்ச்சியில் மக்கள்!!