கொகேய்ன் உட்கொண்ட பின்னர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த முன்னாள் அழகுராணி கைது!!

1425

போதைப் பொருள் உட்­கொண்ட பின்னர் 4 மாத வய­தான குழந்­தைக்கு தாய்ப்பால் கொடுத்­தா­ரென அமெ­ரிக்­காவின் முன்னாள் அழ­கு­ராணி ஒரு­வ­ருக்கு எதி­ராக வழக்குத் தொடுக்­கப்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்­காவின் அரி­ஸோனா மாநி­லத்தைச் சேர்ந்த கிறிஸ்டின் சோரிச் லிசையுஸ் எனும் இந்த யுவதி 2013ஆம் ஆண்டில் மிஸ் அரி­ஸோனா அழ­கு­ராணி போட்­டியில் பங்­கு­பற்­றி­யவர்.

இவர் கடந்த மே மாதம் கொகேய்ன் போதைப்­பொருள் உட்­கொண்ட பின்னர் தனது 4 மாத குழந்­தைக்கு தாய்ப்பால் கொடுத்­தா­ரென பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

தாய்ப்பால் அருந்­திய குழந்தை மயக்­க­ம­டைந்­ததால், அக் ­கு­ழந்­தையை லிசை­யுஸும் அவரின் கண­வரும் அரு­கி­லுள்ள வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­றனர்.

அங்கு குழந்­தையின் ரத்­தத்தை பரி­சோ­தனை செய்­வ­தற்கு மருத்­து­வர்கள் முயன்­ற­போது இவ்­வி­ரு­வரும் எதிர்ப்புத் தெரி­வித்­தனர். எனினும், குழந்­தையை மற்­றொரு வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­று­வ­தற்கு இவர்கள் சம்­ம­தித்­தனர்.

இதை தொடர்ந்து மருத்­து­வ­மனை நிர்­வாகம் டயமன்ட் குழந்­தைகள் நல மருத்­து­வ­ம­னைக்கு குழந்­தையை மாற்­றி­யது. ஆனால் அங்கும் குழந்­தைக்கு நச்­சு­யியல் சோதனை நடத்த மறுப்புத் தெரி­வித்துள்­ளனர்.

இவ்­ வி­டயம் குறித்து குழந்­தைகள் நலத்­துறை உய­ர­தி­க­ரி­க­ளுக்கு மருத்­து­வ­மனை நிர்­வாகம் தெரி­வித்­தது. அதை­ய­டுத்து குழந்­தைகள் நலத்­துறை அதி­கா­ரி கள் உத­வி­யுடன் மேற்­படி குழந்­தைக்கு பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

அப்­போது குழந்­தையின் உடலில் கொகேய்ன் தட­யங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.
இது தொடர்­பாக த கிறிஸ்டின் சோரிச் லிசையுஸ் மற்றும் அவரின் கண­வ­ரிடம் அதி­கா­ரிகள் விசா­ரணை நடத்­தினர்.

தான் கொகேய்ன் உட்­கொள்­ள­வில்லை எனவும் ஆனால், குழந்­தையின் உடலில் எவ்­வாறு கொகேய்ன் சென்­றது என்­பது தெரி­யாது எனவும் த கிறிஸ்டின் சோரிச் லிசையுஸ் ஆரம்­பத்தில் தெரி­வித்தார்.

அவரின் கண­வரும் இதையே கூறினார். எனினும், ஒரு கட்­டத்தில் கிறிஸ்டின் சோரிச் லிசையுஸ் உண்­மையை ஒப்­புக்­கொண்டார். விருந்­தொன்றில் கொகேய்ன் உட்­கொண்டு 12 மணித்­தி­யா­லங்­களின் பின்னர் குழந்­தைக்கு தாய்ப்பால் கொடுத்­த­தாக அவர் கூறினார்.

அதன்பின் கிறிஸ்டின் சோரிச் லிசை­யுஸின்; வீட்டில் சோதனை நடத்திய பொலிஸார், கொகேய்ன் போதை பொருளை கைப்பற்றியதுடன் இருவரையும் கைது செய்தனர். தற்போது இவர்கள் இருவருக்கும் எதிராக வழக்குத் தொடுக் கப்பட்டுள்ளது.