11 ஆண்­களை ஏமாற்றி திரு­மணம் செய்த பெண் பொலிஸார் வலையில் சிக்­கி­னார்!!

658

தொழிலதி­பர்­களை குறி வைத்து 11 பேரை ஏமாற்றி திரு­மணம் செய்து, பின்னர் நகை, பணத்­துடன் தப்பியோடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவரை இந்திய பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

கேரள மாநிலம் கொச்­சியை சேர்ந்­தவர் லோரன் ஜஸ்டின் ஒரு தொழிலதிபர். இவர் கடந்த ஒக்­டோபர் மாதம் கொச்சி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டொன்ரை அளித்துள்ளார்.

அதில், தன்­னு­டைய மனைவி மேகா பார்கவ் (28) திடீ­ரென காணாமல் போய் விட்­ட­தா­கவும், வீட்டிலிருந்த 15 இலட்சம் ரூபா, நகை உள்­ளிட்­டவை மாய­மா­ன­தா­கவும் குறிப்­பிட்டிருந்தார்.

இத­னை­ய­டுத்து மேகாவின் புகைப்­படம், செல்போன் எண் உள்­ளிட்­ட­வை­களை வைத்து கொச்சி பொலிஸார் நடத்­திய விசா­ர­ணையில் இதேபோல் அவர் கேரள மாநி­லத்தில் மேலும் 3 பேரை ஏமாற்றி திரு­மணம் செய்து கொண்டு நகை, பணத்­துடன் தப்பியோடி­யமை தெரி­ய­வந்­தது. ஏனைய 3 பேரும் இதை வெளியில் சொன்னால் அவ­மானம் என கருதி பொலிஸில் முறை­யி­டாமல் இருந்­துள்­ளனர்.

இதை­ய­டுத்து மேகா எங்கு உள்ளார் என கொச்சி பொலிஸார் தீவிர விசா­ரணை மேற்­கொண்­டனர். அப்போது அவர் கேர­ளாவில் 4 பேர் மட்­டு­மன்றி மும்பை, புனே, இந்தூர், ஜெய்ப்பூர் உள்­ளிட்ட ஊர்­களில் மொத்தம் 11 பேரை ஏமாற்றி திரு­மணம் செய்த தகவல் கிடைத்­துள்­ளது.

இத­னி­டையே மத்­திய பிர­தேச மாநிலம் இந்­தூரைச் சேர்ந்த மேகா பார்கவ், டில்லி அருகே நொய்­டாவில் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இதைத்­தொ­டர்ந்து கடந்த ஒரு வார­மாக மேகாவை நொய்டா பொலிஸாரின் உத­வி­யுடன் கொச்சி பொலிஸார் தேடினர்.

இந்தநிலையில் கடந்த வாரம் மேகா கைது செய்­யப்­பட்டார். இந்த மோச­டியில் அவ­ருக்கு உடந்­தை­யாக இருந்த அவ­ரது சகோ­தரி பிராசி, அவ­ரு­டைய கணவர் தேவேந்­திர சர்மா ஆகி­யோரும் கைது செய்யப்பட்­டனர்.

இது குறித்து பொலிஸார் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, மேகா மிகவும் அழ­கான தோற்­றத்­துடன் உள்ளார். இதனால் அவ­ரு­டைய அழகில் மயங்­கிய தொழிலதி­பர்கள் அவரைப் பற்­றியும், அவ­ரு­டைய குடும்பத்தைப் பற்­றியும் அலசி ஆரா­யாமல் திரு­மணம் செய்து உள்­ளனர்.

தொழிலதி­பர்கள் உள்­ளிட்ட வசதி படைத்­த­வர்­களை குறி­வைத்து மேகா திரு­மண வேட்டை நடத்தி உள்ளார். மண­மகள் தேவை விளம்­ப­ரத்தில் வரும் விவா­க­ரத்து ஆன­வர்கள், மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் உள்­ளிட்ட பணக்­கார மண­ம­கன்­களே அவ­ரு­டைய இலக்காகும்.

திரு­மணம் குறித்து தன்­னு­டைய சகோ­தரி, அவ­ரு­டைய கணவர் மூலம் பேசவைத்த மேகா பின்னர் தானே பேசி, தன்­னு­டைய புகைப்­ப­டங்­களை அனுப்பி தொழிலதி­பர்­களை கவர்ந்துள்ளார்.

இதில் ஏமாந்த தொழிலதி­பர்­களைத் திரு­மணம் செய்து கொண்டு அவர்­களின் நம்­பிக்­கையை மேகா பெற்­றுள்ளார். சில மாதங்கள் அவர்களுடன் கணவன் மனைவியாக வாழ்ந்த அவர் பின்னர் கணவர் மற்றும் அவ­ரு­டைய குடும்­பத்­தி­ன­ருக்கு மயக்கமருந்து கொடுத்துவிட்டு நகை, பணத்­துடன் தப்பியுள்ளார்.

சுமார் 2 மாத கால தேடலின்பின்னர் அவர் சிக்­கி­யுள்ளார் என கூறி­யுள்­ளனர்.
ஆனால் தன் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை பொலி­ஸா­ரிடம் மேகா மறுத்தார்.

இது குறித்து அவர், “நான் யாரையும் ஏமாற்­ற­வில்லை. கேர­ளாவில் திரு­மணம் செய்த 3 பேரையும் விவா­க­ரத்துச் செய்து விட்டேன். 4ஆவ­தாக லோரன் ஜஸ்­டி­னுடன் திரு­மணம் நடந்­தது. எங்களுக்கிடையே கருத்து வேறு­பாடு ஏற்பட்டதால் நான் பிரிந்து சென்றேன்” என கூறி­யுள்ளார்.

இதனிடையே மேகா எவ்வளவு பணம், நகை மோசடி செய்தார் என அறிய அவரிடம் பொலி­ஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.