போதைப் பொருள் கடத்தல்காரர்களை கைது செய்த நத்தார் தாத்தா!!

748

போதைப் பொருள் கடத்­தல்­காரர்கள் மறைந்­தி­ருந்த இட­மொன்றை “நத்தார் தாத்தா” முற்­று­கை­யிட்டு சந்­தேக நபர்­களை கைது செய்த சம்­பவம் பெரு நாட்டில் இடம்­பெற்­றுள்­ளது.

பெரு நாட்டின் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களே நத்தார் தாத்தா போன்று வேட­ம­ணிந்து சென்று இந்த முற்­று­கையை நடத்­தினர். பெரு தலை­நகர் லீமாவில் உள்ள வீடொன்றில் போதைப் பொருள் கடத்தல்கா­ரர்கள் சிலர் மறைந்­தி­ருப்­ப­தாக பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்­தது.

இக்­ க­டத்­தல்­கா­ரர்­களைக் கைது செய்­வ­தற்குத் தீர்­மா­னித்த பெரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் நத்தார் தாத்தா வேடத்தில் சென்று அவ் ­வீட்டை சுற்­றி­வ­ளைத்­தனர்.

நத்தார் தாத்தா வேஷத்­தி­லி­ருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர், சம்­மட்டி ஒன்­றினால் கதவை உடைக்க ஏனைய பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் உள்ளே நுழைந்து சந்­தேக நபர்­களை மடக்கிப்பிடித்து கைவி­லங்­கிட்­டனர்.

இந்த முற்­று­கை­யின்­போது பதி­வு­செய்­யப்­பட்ட வீடியோ இணையத்தில் பெரும் எண்ணிக்கையானோரால் பார்வையிடப்பட்டுள்ளது.