வவுனியாவில் உள்நாட்டலுவல்கள் அமைச்சரால் அரச விடுதி திறந்துவைப்பு!!

441

 
வவுனியாவில் இன்று (21.12.216) காலை 9 மணியளவில் அரச விடுதி உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,காதர் மஸ்தான் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹன புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார். வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள். பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.