வவுனியாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!!

388

வவுனியா நீலியாமோட்டை கிராமத்தில் யானைக்கு வைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கி ஒருவர் நேற்று (20.12.2016) இரவு 7 மணியளவில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா நீலியாமோட்டையில் வசிக்கும் செல்வநாதன் (வயது 45) என்ற குடும்பத்தவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் தனது வயல் பிரதேசத்தில் யானைக்காக மின்சார இணைப்பை வைத்துவிட்டு அவர் அதனை மறந்து வயல் பிரதேசத்துக்கு மீண்டும் சென்ற போது மின்னின் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இக் கிராமத்தில் யானையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும், கிராம மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருவதாகவும், கிராமத்திற்குள் யானை உள்நுளையாதவாறு வேலி அமைத்துத் தருமாறு கிராம மக்கள் உரிய அதிகாரிகளை கேட்டு நிற்கின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னரும் இக் கிராமத்தில் யானையினால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.