வவுனியா மாவட்ட செயலகத்தில் புனர்நிர்மாணிக்கப்பட்ட காணிப்பதிவகமும் மாவட்ட பதிவகமும் இன்று காலை 10 மணியளவில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ரேஹன புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், வடமாகாணசபை உறுப்பினர் வி.ஜெயதிலக, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் த. திரேஸ்குமார், ஐக்கியதேசியக்கட்சி வன்னி மாவட்ட அமைப்பாளர் கருனதாச, வவுனிய பிரதேச செயலாளர் கா.உதயராசா, அரச அதிகாரிகள், செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.