37 வருடங்களின் பின்னர் சகாரா பாலைவனத்தில் ஏற்பட்ட அதிசயம்!!

566

 
உலகின் மிகப் பெரிய வெப்பமான பாலைவனமான சகாராவின் காலநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சகாரா பாலைவனத்தின் பல பகுதிகள் பனியினால் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக சகாரா பாலைவனத்தின் எல்ஜுரியாவுக்கு அருகில் உள்ள பகுதி வெள்ளை நிறமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவல்களுக்கமைய சகாரா பாலைவனத்தில் மீண்டும் பூமியில் மாற்றமடைய கூடிய சுற்றாடல் ஏற்படும் பகுதியாகுவதற்கு ஆரம்பமாகியுள்ளது.

இதற்கு 37 வருடங்களுக்கு முன்னர் சகாரா பாலைவனத்தில் ஏற்பட்ட சூறாவளியின் போது பனி விழுந்திருந்தன.

எனினும் தற்போது அவ்வாறான ஒன்றும் ஏற்படாமல் பனி விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக கருதப்படுகின்றது.

அது தொடர்பிலான அரிய புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.