சூரிய சக்தியை கொள்ளையடிக்கும் வேற்றுகிரகவாசிகள் : இலங்கை விஞ்ஞானி தகவல்!!

258

சூரியனை சுற்றி அடையாளம் காணப்படாத பொருள் ஒன்றின் ஊடாக சூரிய சக்தியை, வேற்றுக்கிரகவாசிகள் கொள்ளையடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி கண்காணிப்பு மையம் மற்றும் அமெரிக்காவின் நாசா நிறுவனம் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இது உறுதியாகி உள்ளதாக, இலங்கை வானியல் உயிரியல் தொடர்பிலான ஆராய்ச்சியாளர் கீர்த்தி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நாசா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான தகவல் கடந்த 27ம் திகதி வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சூரிய மண்டலத்திற்கு அருகிலுள்ள மர்ம பொருளின் செயற்பாடு மிகவும் அற்புதமான நிகழ்வொன்றாகும் என ஐரோப்பிய விண்வெளி கண்காணிப்பு மையம் மற்றும் அமெரிக்காவின் நாசா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக கீர்த்தி விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் இந்த வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டு, சூரிய சக்தியை இழுத்துக் கொள்ளும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1960ஆம் ஆண்டில் இயற்பியல் விஞ்ஞானி பரிமன் டய்சன் சமர்ப்பித்த கருத்திற்கமைய சூரியனை சுற்றி பெரிய செயற்கைக்கோள் அமைப்பொன்றை நிர்மாணித்து அதன் ஊடாக பெரிய மூலப்பொருளினால் சூரிய சக்தியை உறிஞ்சுவதற்காக வேற்றுகிரகவாசிகள் செயற்படுவதாக வெளியிட்ட கருத்து தற்போது உறுதியாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய சூரிய சக்தியை பூமியில் வாழ்பவர்கள் மாத்திரம் இன்றி வேற்றுகிரகவாசிகளும் தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி அதன் நன்மையை பெற்றுக் கொள்வதாக தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர் கீர்த்தி விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.