வவுனியா சார்பாக வடமாகாண சபை உறுப்பினர் தியாகராஜாவால் விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள்!!

299

21.12.2016ம் திகதி வடமாகாணசபையின் வரவு செலவுத்திட் விவாதத்தின் போது மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கை

முதலமைசின் நிதித்திட்டமிடல் சமூகசேவைகள் புனர்வாழ்வு மின்சக்தி வீடமைப்பு உள்ளுராட்சி மற்றும் மாகாண நீர்வழங்கல் அமைச்சின் வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது ஆற்றிய உரையில் கோரப்பட்ட விடயங்கள்.

1. வவுனியா நகரசபைக்கு உட்பட்ட இடங்களில் திண்மக்கழிவுகள் அகற்றுதல் சம்பந்தமாக நல்முறையில் செயல்படுத்த உரியநடவடிக்கை எடுக்கவேண்டும்.

2. ஓமந்தை அரசவீட்டுத்திட்டத்தில் உள்ள வீதிகளை புனரமைத்தது வீதிகளுக்கு மின்விளக்கு பொருத்தவேண்டும்.

3. புற்குளம் கண்ணகை அம்மன் வீதி முற்றாதிருத்தம் செய்யவேண்டும்.

4. வவுனியா, நெடுங்கேணி, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராமங்களில் உள்வீதிகளை திருத்தம் செய்து கொடுத்து மக்கள் பாவனைக்கு உதவிசெய்யவேண்டும்.

5. கனகராயன்குளம் கிராமத்தில் ஓர் சுற்றுலாமையம் ஒன்றை அமைத்துக் கொடுக்கவேண்டும்.

6. கருப்பணிச்சங்குளம், கள்ளிக்குளம் கிராமங்களில் உள்ள மக்களுக்கு மலசலகூடவசதி செய்து கொடுக்கவேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.