வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (22.12.2016) அதிகாலை பணம், நகை என்பன திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
இன்று அதிகாலை பூட்டிய வீட்டிற்குள் பின்பக்க கதவினை உடைத்துக்கொண்டு உட்புகுந்த திருடர்கள் வீட்டின் உரிமையாளர்கள் உறக்கத்திலிருந்து போது உரிமையாளரின் காற்சட்டைப் பையிலிருந்த பணம், மற்றும் வீட்டின் சுவாமி அரை அலுமாரியினைத் திறந்து பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த சிறு மோதிரம் என்பனவற்றை திருடியதுடன் அருகிலிருந்த அறையில் பெண்கள் கைபையினை எடுத்து அதிலிருந்த பணம் உட்பட 40 ஆயிரம் ரூபாவரையில் திருடர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாகவும்,
அதிகாலை 2.30 மணியளவில் வீட்டின் உரிமையாளரின் மனைவி தண்ணீர் குடிப்பதற்கு எழுந்து சென்றபோது வீட்டில் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஓமந்தைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.