தமக்கு எதி­ராகப் போரா­டிய யுவ­தியை கொல்­ப­வ­ருக்கு 10 லட்சம் டொலர் சன்­மானம் வழங்­கு­வ­தாக ஐ.எஸ். அறிவிப்பு!!

513

ஐ.எஸ். தீவி­ர­வாத இயக்­கத்­துக்கு எதி­ராகப் போரா­டி­வரும் 23 வயதான் ஜோன்னா பலானி எனும் யுவதியை கொல்­ப­வ­ருக்கு ஒரு மில்­லியன் டொலர் அன்­ப­ளிப்பு அளிப்­ப­தாக ஐ.எஸ். தீவி­ர­வாத இயக்கம் அறி­வித்­துள்­ளது.

குர்திஷ் கிளர்ச்­சி­யா­ளர்­ க­ளுடன் இணைந்து, ஐ.எஸ். தீவி­ர­வாத இயக்­கத்­துக்கு எதி­ராக போரா­டிய ஜோன்னா பலானி தற்­போது டென்­மார்க்கில் சிறை யில் அடைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஈரானை பூர்­வீ­க­மாகக் கொண்­டவர் ஜோன்னா பலானி, இவ­ரது குடும் பம் பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு டென்மார்க் நாட்டில் குடி­யே­றி­யது. பின், டென்மார்க் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்றுவந்த ஜோன்னா பலானி, தனது கல்­வியை இடை­நி­றுத்­தி­விட்டு குர்திஸ் இயக்­கத்­தோடு இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்­கத்­துக்கு எதி­ராக துப்­பாக்கி ஏந்தி போரா­டினார்.

சிரி­யா­வுக்கு சென்று போராட்­டத்தைத் தொடர்­வ­தற்கு ஜோன்னா முயற்­சித்­த­போது, சிரிய எல்லைப் பகு­தி­களில் அந்த நாட்டு இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்டார்.

அதை­ய­டுத்து டென்மார்க் அரசு, ஜோன்னா பலா­னியின் கட­வுச்­சீட்டு மற்றும் அடை­யாள அட்­டையை பறி­முதல் செய்து தமது நாட்­டுக்கு அழைத்துச் சென்­றது. சட்டவிரோ­த­மாக நாட்­டை­விட்டுத் தப்பிச் சென்­ற­தாலும், போராட்டக் குழு­வோடு இணைந்து செயற்­பட்ட குற்­றத்­துக்­கா­கவும் டென்மார்க் நீதிமன்­றத்தில் ஜோன்னா பலா­னிக்கு எதி­ராக வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டது.

ஜோன்னா மீண்டும் யுத்­தத்தில் பங்­கு­பற்­று­வதைத் தடுப்­ப­தற்­காக கடந்த செப்­டெம்பர் மாதம் அவருக்கு 12 மாத கால பய­ணத்­தடை விதிக்­கப்­பட்­டது. ஆனால், கடந்த ஜூன் மாதம் தான் கத்­தா­ருக்கு பயணம் செய்­ததை கடந்த வாரம் ஜோன்னா பலானி ஒப்­பு­க­கொண்டார்.

அதை­ய­டுத்து பய­ணத் ­த­டையை மீறி­ய­மைக்­காக அவர் மீண்டும் கைது செய்­யப்­பட்டார். அவ­ருக்கு 2 வரு­ட­ம் வ­ரை­யான சிறைத்­தண்­டனை விதிக்­கப்­ப­டலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதே­வேளை, ஐ.எஸ்.தீவி­ர­வா­தி­க­ளுடன் இணைந்து போரா­டிய பின்னர் தாயகம் திரும்­பு­வர்­க­ளுக்கு டென் மார்க் அரசு தொழில் வாய்ப்­பையும் வழங்கும் நிலை யில், டென் மார்க் அரச படைகள் போராடும் தரப்­புடன் இணைந்து போரிட்­ட­மை க்­காக ஜோன்­னாவை தண்­டிப்­பது அபத்­த­மா­னது என அவரின் சட்டத்­த­ரணி கூறி­யுள்ளார்.

இந்­நி­லையில், தமக்கு எதி­ராக ஆயுதப் போராட்டம் நடத்­திய ஜோன்னா பலா­னியை கொல்­ப­வ­ருக்கு 10 லட்சம் அமெ­ரிக்க டொலர் வழங்­கப்­படும் என ஐ.எஸ். இயக்கம் அறி­வித்­துள்­ளது.