விரல்களினால் சார்ஜ் செய்யக் கூடிய புதிய ஸ்மார்ட்போன் கண்டுபிடிப்பு!!

437

நேர்த்தியான தொழில்நுட்பங்களுடன் ஸ்மார்ட்போனை தொட்டாலே சார்ஜ் ஏறும்படி விரல்களை சார்ஜராக மாற்றியுள்ளனர் விஞ்ஞானிகள்.

ஸ்மார்ட்போனில் பெரிய பிரச்னை என்னவென்றால் சார்ஜ் தீர்ந்துவிடுவது தான். எவ்வளவு தான் விலையுயர்ந்த போனாக இருந்தாலும், அதில் புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்றுவரை இந்த பிரச்சினை நீடிக்கிறது.

இதனை முறியடிக்கும் நோக்கில் பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஓர்கானிக் பாலிமரினாலான (organic polymer) செல்போனை கண்டுபிடித்துள்ளனர்.



இந்த ஓர்கானிக் பொலிமரால் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனின் திரையை தொட்டால் சார்ஜ் ஏறும் விதத்தில் வடிவமைத்துள்ளனர். இதில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் மழைத்துளி திரையில் விழும்போது அதனை மின்சாரமாக்கி பேட்டரி தானாக சார்ஜ் ஏறும்படி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஸ்மார்ட்போன்களில் உள்ள வயர்லெஸ் சென்சார்கள் இத்தகைய தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதனால் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது தானாக சார்ஜ் ஏறி விடுகிறது. அயனுக்குரிய டையோட. பேட்டரியில் பொருத்தபட்டுள்ளதால் பேட்டரிக்கு மைக்ரோவாட்ஸ் மின்சாரம் கிடைக்க பெறுகிறது.