வரலாற்றில் முதல் முறையாக 152 ரூபாய் வரை அதிகரித்துள்ள டொலரின் பெறுமதி!!

471

இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 152 ரூபா 12 சதமாக அதிகரித்துள்ளது.மத்திய வங்கிய நேற்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த தகவல் வெளியாகயுள்ளது.

கடந்த காலங்களில் டொலரின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வந்துள்ளதைக் காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வங்கிகளில் அமெரிக்க டொலர் பற்றாக்குறை நிலவுவதாக வங்கி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, வங்கிகளில் டொலர் பற்றாக்குறை இல்லையென தெரிவித்திருந்தார்.

எப்படியிருப்பினும் ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக விசேட தலையீட்டு நடவடிக்கைகள் ஒன்று மேற்கொள்ளப்படாதென அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது.