வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் சகோதரன் உட்பட நால்வர் கைது!!

720

வவுனியாவில் நேற்று முன்தினம் இரவு 26 வயதான த.சுபராஜ் என்ற இளைஞன் உணவகத்தில் வைத்து தாக்கப்பட்டு பின்னர் கடத்திச் செல்லப்பட்டு கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.

இச் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் உணவகத்தில் இரவு பணியாற்றிய சகோதரன் உட்பட 4பேரை விசாரணைக்கு வருமாறு பொலிசார் அழைத்து விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் பேரூந்தின் சாரதி, நடத்துநர் இருவரையும் கைது செய்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்தி :  வவுனியாவில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு கடும் தாக்குதல்!!