வவுனியாவில் தகவலறியும் உரிமைச்சட்டம் தொடர்பான கருத்தரங்கு!!

244

 
வவுனியா கலாச்சாரமண்டபத்தில் இன்று ( 23.12.2016) காலை 10.00 மணிக்கு வடமாகாணத்திலிலுள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கான தகவலறியும் உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ரான்ஸ்பிரன்சி இன்ரநெசனல் சர்வதேச நிறுவனத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் வளவாளர்களாக ரான்ஸ்பிரன்சி இன்ரநெசனல் சர்வதேச நிறுவனத்தின் வடமாகாண இணைப்பாளர் ரவிந்திர டி சில்வா , திட்ட முகாமையாளர் சங்கீதா , சிறப்பு விருந்தினராக வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி ச.கர்ணன், பொதுமக்கள் , பாடசாலை மாணவர்கள் என நூற்றுக்குக்கு மேற்ப்ட்டோர் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தகவலறியும் உரிமைச்சட்டம் தொடர்பான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் நோக்கிலும் தவல் அறியும் உரிமை சட்டத்தினை பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்தாலாம் என்ற எண்ணக்கருவில் இவ் கருத்தரங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.