வவுனியாவில் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு!!

320

வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியலாயத்தில் 2016இல் தரம் ஜந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 177 புள்ளிகளைப் பெற்று சித்தியைடைந்த கட்டையார் குளம் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் பிரணவனுக்கு இன்று (23.12.2016) காலை வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமாரால் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது.

இவரது மகன் அபிலேஸின் முதலாவது பிறந்த தினத்தை முன்னிட்டு குறித்த மாணவன் வசதியற்ற நிலையில் பாடசாலைக்கு நடந்து செல்வதாகவும் துவிச்சக்கரவண்டி வழங்குமாறும் மாணவனின் தாயார் விடுத்த வேண்டுகோளினையடுத்து, இத் துவிச்சக்கரவண்டி தமிழ் விருட்சம் அமைப்பினரால் வழங்கப்பட்டது.