சௌந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி மனுத் தாக்கல்!!

522

ரஜனியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜனிகாந்துக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சௌந்தர்யா ரஜனிகாந்த் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

அவர்கள் பிரிவுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், தனது கணவர் அஸ்வினை சட்டரீதியாக விவாகரத்து செய்து வைக்குமாறு சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்று சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கின்றது. சௌந்தர்யா ரஜனிகாந்த் தற்போது தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கவிருகின்றார்.