இப்படியும் ஒரு மக்கள் கூட்டமா : இணையத்தில் வைரலான ஆச்சரிய புகைப்படங்கள்!!

487

 
அமேசான் காட்டில் உலகத்துடன் தொடர்பு இல்லாமல் இருக்கும் பழங்குடியின மக்களின் அற்புத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த புகைப்பட கலைஞரான ரிகார்டோ ஸ்டுக்கர்ட் அமேசான் காடுகளை புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.

இந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் அவர் ஹெலிகொப்டரை வேறு வழியாக இயக்கியுள்ளார்.

அப்போது உலகத்துடன் தொடர்பில்லாமல் இருக்கும் பழங்குடியின் மக்கள் தென்பட்டுள்ளனர். உடனே தனது கமெராவை எடுத்து அவர்களை புகைப்படம் எடுத்துள்ளார்.

இதுகுறித்து ரிகார்டோ கூறுகையில், ஹெலிகொப்டரை திசைதிருப்பிய அந்த தருணம் எனக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஒன்று. பழங்குடியின் மக்கள் ஹெலிகொப்டரை பார்த்ததும் தங்களை பாதுகாத்துக் கொள்ள உடலில் சாயங்களை பூசிக்கொண்டனர். ஒரு சிலர் ஆயுதங்களை எடுத்தும் குறிபார்த்தனர் என்றார்.

அவர் எடுத்த இந்த அற்புத புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.