வவுனியாவில் களைகட்டும் கிறிஸ்மஸ் பண்டிகை!!

1173

 
இயேசு பிரானின் பிறப்பையொட்டி நத்தார் பண்டிகையைக் கொண்டாட வவுனியா மாவட்ட கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றார்கள்.

நத்தார் பண்டிகைக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் பெரும்ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் பொதுச்சந்தைகள், வியாபார நிலையங்களில் வியாபாரம் சூடுபிடித்துள்ளதையும் காணக்கூடியதாகவுள்ளது.

அத்தோடு வெளிமாவட்ட வியாபாரிகளும் இங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவை தவிர நத்தாரின் இன்னொரு சிறப்பான நத்தார் மரங்கள் வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு சிறுவர்களை மகிழ்விக்க நத்தார் பாப்பாவும் அங்காங்கே வருகைதந்து குதூகலப்படுத்துவதையும் காணக்கூடியதாக உள்ளது.