போலித் துப்பாக்கியால் கடத்தப்பட்ட லிபியா விமானம் : விசாரணையில் அம்பலம்!!

637

கடத்தப்பட்ட லிபிய விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக மால்டா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடத்தலை மேற்கொண்ட இரண்டு நபர்களும் பொலிஸாரிடம் சரணடைந்ததாக மால்டா பிரதமர் ஜோஸப் மஸ்கட் தெரிவித்தார்.

விமானத்தை கடத்த பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு மற்றும் துப்பாக்கியை பொலிஸார் கைப்பற்றினர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் விமானத்தை கடத்த பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த கடத்தல் சம்பவத்தை மேற்கொண்ட இருவரும் லிபியாவின் முன்னாள் தலைவர் கர்னல் கடாபியின் ஆதரவாளர்கள் என தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.