வவுனியாவில் நேற்று (24.12.2016) காலை 10.30 மணியளவில் நகரசபை மண்டபத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு மாவட்ட மட்டத்திலான அஞ்சலி நிகழ்வு மேழிக்குமரன் தலைமையில் இடம் பெற்றது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் நினைவுரைகளும் கலந்து கொண்டவர்களினால் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர் சிவசக்தி ஆனந்தன்,வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள் கலைஞர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், பொது மக்கள் என நூற்றுக்கு மேற்பட்ட பலரும் கலந்து கொண்டனர்.