சேவை முடிந்து தரிப்பிடம் நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து ஒன்று நேற்று (24.12.2016) வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த மார்கண்டு திருச்செல்வம் (வயது 52) என்பவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.








