வவுனியா சகாயமாதபுரம் மாணவர்களுக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் அன்பளிப்பு!!

301

 
வவுனியா சகாயமாதபுர சண் இளைஞர் கழக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்று முன்தினம் (24.12.2016) வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் அனுசரணையில், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வழங்கப்பட்டது.

சண் இளைஞர் கழகத்தின் தலைவர் திரு.ஸ்ரெனின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமாகிய க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி திரு.அஜித் சந்திரசேன, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன், வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளருமான ஸ்ரீ.கேசவன், உபதலைவர் பி.கெர்சோன், அமைப்பாளர் வ.பிரதீபன், கலாசார பிரிவின் ஒழுங்கமைப்பாளர் தே.பிரகாஸ்கர் ஆகியோருடன் இன் நிகழ்வில் சண் இளைஞர் கழகத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களும், மாணவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.