வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு!!

292

 
வவுனியா நீலியாமோட்டை, சின்னத்தம்பனை பகுதியில் நேற்று (25.12.2016) காலை 9.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரால் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நீலியாமோட்டை சின்னத்தம்பனை பகுதியில் நேற்று காலை 9.30 மணியளவில் வெடிபொருட்கள் இருப்பதனை அவதானித்த புலனாய்வுத்துறை அதிகாரிகள் உடனடியாக வவுனியா விமானப்படையினருக்கு அறிவித்தலை வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விமான படையினர் விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக இருக்கும் என சந்தேகிக்கப்பட்டு விசேட அதிரடிப்படையினருக்கு தகவலை வழங்கியதையடுத்து கைக்குண்டு ஒன்று, மோட்டார் குண்டு ஒன்று, மிதிவெடி 41 போன்ற வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.