வவுனியா நகரின் மத்தியில் 8 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொகுதி!!

365

 
வவுனியா நகரின் மத்தியில் காணப்படும் கழிவுநீரை சுத்திகரித்து நன்னீராக குளத்துடன் இணைக்கும் செயற்திட்டம் ஒன்று யுனொப்ஸ் நிறுவனத்தின் நிதி உதவியுடன் எட்டு கோடி ரூபா செலவில் மூன்று மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த வேலைத்திட்டம் நிறைவடைந்துள்ளது என இச்செயற்திட்ட பொறுப்பாளர் தெரிவித்தார்.

நீர்பாசான திணைக்களமும், நகரசபையும் இணைந்து இத்திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இவ் வேலைத்திட்டங்கள் யாவும் முடிவடைந்த நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களிற்குள் கையளிக்கவுள்ளதாகவும் இவ் வேலைத்திட்ட பொறுப்பாளர் தெரிவித்தார்.

இக் கழிவுநீர் தாங்கியானது 5 தொட்டிககளை கொண்டுள்ளது. 3 தொட்டியினுள் கழிவுநீரை சுத்தப்படுத்தி மற்றைய இரு தொட்டியினுள் சென்று பின்னர் குளத்தினுள் நன்னீராக சென்று வவுனியா குளத்தினுள் இணைகின்றது. இச் சுத்திகரிப்பானது பெரும் மழைவீழ்ச்சி ஏற்பட்டாலும் சுத்திகரிக்க கூடிய மோட்டார் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வவுனியா நகரின் மத்தியில் உள்ள கழிவுகள், எண்ணை பதார்த்தங்கள், நச்சுப் பொருட்கள் போன்ற கழிவுப் பொருட்கள் குளத்தினுள் செல்வதால் குளம் மாசடைகின்றது. அத்துடன் நகரின் மத்தியில் துர்நாற்றம் வீசுவதானாலும் இத்திட்டம் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.