வவுனியாவில் கரடி தாக்கி இருவர் படுகாயம்!!

236

 
வவுனியாவில் விறகு எடுக்கச் சென்ற இரு பெண்கள் மீது கரடி தாக்கியத்தில் இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த சனிக்கிழமை (24.12.2016) மாலை 5.30 மணியளவில் மடுக்கந்தை, அட்டமஸ்கட பகுதியில் இரு பெண்கள் விறகு வெட்டுவதற்குச் காட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு பதுங்கியிருந்த கரடி குணரத்தின சீலாவதி 56 வயது, சிறியலதா 53வயது ஆகிய இரு சகோதரர்கள் மீது சரமாரியாக தாக்கியுள்ளது.

இதில் படுகாயமடைந்த இரு பெண்களும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.