வவுனியா பேரூந்து நிலையத்தில் 3 1/2 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!!

357

வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிமை பிற்பகல் 2.30 மணியளவில் 3 1/2 கிலோ கேரளா கஞ்சாவினை கொண்டு செல்ல முற்பட்ட நபர் ஒருவரைக்கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று ஞாயிற்றுக்கிமை பிற்பகல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் பேரூந்தில் சிலாபம் பகுதிக்கு கேரளா கஞ்சாவினைக் கொண்டு செல்வதாக பொலிசாருக்கக் கிடைத்த தகவலலையடுத்து மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் குறித்த பேரூந்தில் பொலிசார் மேற்கொண்ட சோதனையின்போது மூன்று கிலோ ஜந்நூறுகிராமிலான பொதி செய்யப்பட்ட கேரளா கஞ்சாவினை மறைத்து எடுத்துச் செல்ல முற்பட்ட 35 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் இன்று திங்கட்கிமை காலை தெரிவித்துள்ளனர்.

இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.