நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுமி பரிதாபமாக பலி!!

570

கல்பிட்டி – புத்தளம் வீதியின் 39வது கட்டைப் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேறு சிலருடன் நீச்சல் தடாகத்திற்கு சென்றிருந்த வேளையே அவர் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தில் பலியானவர் கல்பிட்டி – கரிஞ்ஞம்பிடிய பகுதியைச் சேர்ந்த சிறுமி எனத் தெரியவந்துள்ளது.