முதியோர் இல்லத்திலிருந்து இராட்சத மலைப் பாம்பு மீட்பு!!

1246

கதிர்காமத்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் இராட்சத மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இல்லத்தை நடத்திச் செல்லும் முகாமையாளரின் அறையில் இருந்து பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்பது அடி நீளமான பாம்பு, அறையில் சுருண்டிருந்த நிலையில் முகாமையாளரால் அடையாளம் காணப்பட்டது.

வனவிலங்கு அதிகாரிகள் வருகை தருவதற்கு முன்னர் குறித்த இராட்சத மலைப்பாம்பை தொழிலாளர்களின் உதவியுடன் குறித்த முகாமையாளர் இரும்பு கூண்டினுள் அடைத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வனவிலங்கு அதிகாரிகள், குறித்த இராட்சத பாம்பினை மீட்டு, பாதுகாப்பாக காட்டில் விடுவித்துள்ளனர்.