வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் சுனாமியில் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி!!

750

 
வவுனியா தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில் குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் வவுனியா அந்தணர் ஒன்றித்தின் தலைவர் முத்து ஜெயந்தி நாதக் குருக்களின் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகள் நினைவு கூறப்பட்டதுடன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது.

சுனாமிப்பேரலையில் இறந்தவர்களை நினைவு கூர்ந்து எண்ணை விளக்குகள் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலியும் நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார, வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார்,வடக்குமாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன், மாவட்ட செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் அ.பிரதீபன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.