மன்னாரில் இருந்து அனுராதபுரம் சென்ற சிறுத்தைக் குட்டி!!

840

 
மன்னார் அடம்பன் பிரதேசத்தில் அனாதரவான நிலையில் காணப்பட்ட சிறுத்தை குட்டி ஒன்றை மன்னார் பொலிஸ் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

சிறுத்தை குட்டியை பொலிஸார் அனுராதபுரம் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சிறுத்தை குட்டி நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக அனுராதபுரம் மற்றும் வடமேல் பிராந்தியத்திற்கு பொறுப்பான கால்நடை மருத்துவர் சந்தன ஜயசிங்க தெரிவித்துள்ளார்.