வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!!(அதிர்ச்சிப் படங்கள்)

626

 
வவுனியா பூனாவை இரானுவ முகாமிற்கு அருகே இன்று (27.12.2016) அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சுகாதார திணைக்களத்திற்கு சொந்தமான பிக்கப் ரக வாகனமும் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

மதவாச்சி, நாவற்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் வைத்தியர் உள்ளிட்ட இரண்டு பெண்களும் ஆணொருவரும் பலியாகியுள்ளனர்.

புத்தளம் வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றும் ரி.எம்.ஏ.சுதேசிகா, அவரது கணவரான முகமது சபூர், மாமனாரான வவுனியாவின் பிரபல வர்த்தகர் சப்ரின், அவரது மனைவி மலீனா ஆகியோர் பயணித்த வாகனம் இந்த விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த வைத்தியரின் கணவர், படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

பாரவூர்தியின் சாரதியை கைதுசெய்துள்ள மதவாச்சி பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சுகாதார திணைக்களத்தின் வாகனம், கனரக வாகனமொன்றுடன் மோதியதில் வைத்தியர் உள்ளிட்ட இருவர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.