வவுனியாவில் தனியார் பேரூந்து சாரதியின் தாக்குதலில் இ.போ சபை சாரதி படுகாயம்!!

1201

வவுனியா இலுப்பையடி பேரூந்து தரிப்பிடத்தில் இ.போ.ச சாரதி மீது தனியார் பேரூந்து சாரதி தாக்கியதில் படுகாயமைந்த சாரதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

இன்று (27.12.2016) பிற்பகல் 3.10 மணியளவில் வவுனியா செட்டிகுளம் செல்லவிருந்த இ.போ.ச பேரூந்தில் பயணிகள் ஏறிக்கொண்டிருக்கையில் வவுனியாவிலிருந்து மன்னார் செல்லவிருந்த தனியார் பேரூந்து சாரதிக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

சம்பவத்தில் ஈடுபட்ட இரு சாரதிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகள் மேற்கொண்டதுடன் இ.போ.ச சாரதியான மகேஸ்வரன் வயது 35 மீது தனியார் பேரூந்து சாரதி தாக்கியதில் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்ட தனியார் பேரூந்து சாரதியிடம் நீங்கள் முதலில் செல்கின்றீர்களா? அல்லது நான் முதலில் செல்லவா? என்று இ.போ.ச பேரூந்து சாரதி கேட்டதையடுத்து பேரூந்தில் இருந்த தனியார் பேரூந்து சாரதி தனது பேரூந்து கதவைத்திறந்து குறித்த சாரதியின் முகத்தில் தாக்கியுள்ளார்.

இருவரிடமும் விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.