பல இடங்களில் பாரிய மோசடியில் ஈடுபட்ட நபர் சிக்கினார்!!

563

ஹட்டனில் பொது சுகாதார பரிசோதகர் எனக்கூறி பணம் பறிக்க முற்பட்ட நபரொருவர், உணவக உரிமையாளரின் அறிவித்தலுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (26.12) ஹட்டனில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த நபர் ஹட்டன் நகரில் உள்ள விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களுக்கு சென்று அவற்றை பரிசோதனை செய்து, குறைபாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான இந்த சந்தேகநபர், நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதான நகரங்களுக்கு நீண்ட நாட்களாக சென்று இவ்வாறான முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.