யுவதி குத்திக் கொலை : காதலன் விளக்கமறியலில்!!

563

நான்கு வருட கால­மாக தன்னை காத­லித்து வந்த காதலி காதலை முறித்துக் கொண்டு வேறொரு இளை­ஞரை திரு­மணம் செய்­து­கொள்ள முற்­பட்­டதால் ஆத்­தி­ர­ம­டைந்த காதலன் காத­லியை வழி­ம­றித்து கத்­தியால் குத்தி கொலை செய்த சம்­பவம் ஒன்று மாத்­தளை மகா­வெல பொலிஸ் பிரிவில் நிகழ்ந்­துள்­ளது.

யுவ­தியை கொலை செய்த இளைஞன் விஷ­ம­ருந்­திய நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள நிலையில் மாத்­தளை பதில் நீதிவான் இளை­ஞனை எதிர்­வ­ரும் ஜன­வரி மாதம் 3 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.