இலங்கையில் பாரிய கொள்ளையில் ஈடுபட்ட 4 வெளிநாட்டவர்கள் கைது!!

498

தனியார் வங்கி ATM இயந்திரத்தில் செலுத்தப்படும் அட்டைகளின் இரகசிய இலக்கங்களை திருடி மேற்கொண்ட பாரிய மோசடி, தகவல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி முறையின் கீழ் பல மில்லியன்கள் கொள்ளையடித்ததாக கூறப்படும் பல்கேரியன் நாட்டவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரகசிய இலக்கங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக அவர்களின் சில பொருட்களை ATM இயந்திரங்களில் பொருத்துவதாக தெரியவந்துள்ளதென குற்றப் புலனாய்வு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களினால் இலங்கை மற்றும் இந்தியாவில் இந்த மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேற்றைய தினம் குற்ற விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள், குறித்த சந்தேக நபர்களின் பின்னால் சென்று ATM இயந்திரத்தில் பணம் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் மிரிஸ்ஸ பிரதேச பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் இவ்வாறு 5 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்துள்ளதாக தற்போது வரையில் தெரியவந்துள்ளதென குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான மோசடியின் மூலம் பணக் கொள்ளையில் ஈடுபட்ட இரு இலங்கையர்கள் முன்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.