வவுனியாவில் ஹெரோயின் விற்பனை செய்த நால்வர் கைது!!

428

Heroin_Bindle

வவுனியாவில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட கொழும்பைச் சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் இருவர் கைதாகியுள்ளனர்.

அதில் ஒருவர் 70 மில்லிகிராம் ஹெரோயினை விற்பனை செய்ததுடன் 370 மில்லிகிராம் ஹெரோயினை தன்னகத்தே வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. இவர் மாலிகாவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு இவர் வசமிருந்து முச்சக்கர வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மற்றையவர் கிரன்பாசைச் சேர்ந்தவர். இவர் வசமிருந்து 70 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா ரயில் நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் மேலும் இருவர் கைதாகியுள்ளனர்.

70 மில்லிகிராம் ஹெரோயின் விற்பனை செய்ததோடு 2 கிராம் 160 மில்லிகிராம் ஹெரோயினை தன்னகத்தே வைத்திருந்த, மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரும், 170 மில்லிகிராம் ஹெரோயினுடன் மிரானியா வீதி கொழும்பை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.