வவுனியாவில் 370 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கல்!!

281

 
வவுனியா கற்பகபுரம் அதக பாடசாலையில் இன்று (28.12.2016) பிற்பகல் 1 மணியளவில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இப்பகுதியில் நீண்டகாலமாக காணி அனுமதிப்பத்திரம் இன்றி வசித்து வந்த 370 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் கருணதாச, வவுனியா இணைப்பாளர் சிவலிங்கம், வவுனியா உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி, கிராமசேவையாளர், பிரதேச செயலக காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.