வவுனியா விபத்தில் பலியான இளம் பெண் வைத்தியர்!!

392

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 32 வயதுடைய பெண் வைத்தியர் உட்பட அவரது குடும்ப உறுப்பிர்கள் மூவரே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த வைத்தியர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம், கண்டி, ஏ9 வீதியின் வவுனியா , பூஓய பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் மற்றும் அதற்கு எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருந்த கெப் வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டிருந்தது.

நாரஹென்பிட்டி பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய வைத்தியரான எம்.டீ.டீ.சுதேஷிகா என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

விபத்தில் கெப் வண்டியில் பயணித்த வைத்தியரின் மாமா மற்றும் அத்தை உயிரிழந்துள்ள நிலையில், கடும் காயமடைந்த வைத்தியரின் கணவர் வவுனியா அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ள நிலையில், சாரதிகள் இருவரில் ஒருவருக்கு ஏற்பட்ட நித்திரையே விபத்திற்கு காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த மூவரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறுகின்ற நிலையில், தற்போது வரையில் கணவர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

-தமிழ்வின்-